search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்னணு வாக்குப்பதிவு"

    • பாராளுமன்ற தேர்தல் ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் விரைவுபடுத்தியுள்ளது.
    • எந்திரங்கள் வருவாய் கோட்டாட்சியர்கள் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்படவுள்ளது.

    காஞ்சிபுரம்:

    பாராளுமன்ற பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளதை தொடர்ந்து, அதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் விரைவுபடுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் செவிலிமேடு கிராமத்தில் உள்ள தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திர கிடங்கிலிருந்து, முதல் நிலை சரிபார்ப்பு முடிவுற்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலிருந்து, அலுவலர்களுக்கு பயிற்சியும் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்துவதற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம் ஆகியவை, மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், பொது மக்களின் விழிப்புணர்வுக்காக, வருவாய் கோட்டாட்சியர்கள் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்படவுள்ளது.

    • 30 மேஜைகளில், 90 பணியாளர்கள் ஈடுபட்டனர்.
    • பழுதடைந்த எந்திரங்கள், பெங்களூருக்கு காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பெட்டக அறை வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரி பார்க்கும் பணிகள், மாவட்ட தேர்தல் அலுவலர் கே.எம்.சரயு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற 2024-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் எந்திரங்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த எந்திரங்களை சரிபார்க்கும் முதற்கட்ட பணி கடந்த மாதம் ஜூலை 4-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சரிபார்க்கப்பட்ட எந்திரங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பரிசோதிப்பதற்கான முதற்கட்ட மாதிரி வாக்குப்பதிவு 2 நாட்கள் நடந்தது. இதற்காக 5 சதவீத எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டன.

    இதில் ஒரு சதவீத எந்திரங்களில் 1200 வாக்குகளும், 2 சதவீத எந்திரங்களில் 1000 வாக்குகளும், 2 சதவீத எந்திரங்களில் 500 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதற்காக 30 மேஜைகளில், 90 பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் முதல் நிலை சரிபார்ப்பு பணியில் சரிவர செயல்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, மாவட்ட வருவாய் அலுவலர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும், முதல் நிலை சரிபார்ப்பில், பழுதடைந்த எந்திரங்கள், பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட உள்ளது, இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது தேர்தல் தனி தாசில்தார் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 27-ந் தேதி அன்று நடைபெறவுள்ளது. கிழக்கு தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்துவதற்காக 1408 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு எந்திர ங்கள் அனைத்து அங்கீக ரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகள் முன்னிலையில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்காக 467 கட்டுப்பாட்டு எந்திரங்களில் 286 கட்டுப்பாட்டு எந்திரங்களும்,

    474 வாக்குப்பதிவு எந்திரங்களில் 286 வாக்குப்பதிவு எந்திர ங்களும், 467 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் எந்திரங்களில் 310 எந்திரங்களும் என மொத்தம் 882 வாக்குப்பதிவு எந்திரங்களும் 30 சதவீதம் கூடுதல் ஒதுக்கீடாகவும் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதன்படி ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள கணினி வழியில் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்

    ஈரோடு ஆர்.டி.ஓ. சதிஷ்குமார் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமாரிடம் வழங்கினார்.

    இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ள்ளது. 24 மணி நேரமும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம் மாநகராட்சி பொறியாளர் கணேசன் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36-வது வார்டில் அமைக்கப்பட்டுள்ள 4 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு கருவிகளுக்கு முதல் மற்றும் இரண்டாவது சீரற்றமயமாக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான டாக்டர். மா. ஆர்த்தி, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) டி.ஆர்.ஸ்ரீதர், காஞ்சிபுரம் மாநகராட்சி பொறியாளர் கணேசன் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×